ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாலமுருகன் கோயில் ஆனி மாத திருவிழாவையொட்டி படகு போட்டி நடைபெற்றது.
மோர்பண்ணை கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு மீனவ இளைஞர் மன்றம் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் 24 படகுகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கி செலுத்தப்பட்டன.
ஒவ்வொரு படகிலும் 6 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், போட்டி போட்டுக்கொண்டு படகுகள் மிதந்துச் சென்றது பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற அணியினருக்கு சுழல் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.