சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியை சேர்ந்த சாத்தம்மை என்ற மூதாட்டி 3ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துள்ளார்.
இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது, பொதுமக்கள் கொடுக்கும் சிறுதொகையை வைத்து வாழ்ந்து வருகிறார்.
மேலும், கோயில்கள் முன்பு கோலமிட்டும், ஆங்கிலத்தில் சிந்திக்க கூடிய வாக்கியங்களை எழுதியும் அசத்தி வருகிறார். குறிப்பாக கோலமாவைக்கொண்டு ஆங்கில வார்த்தைகளை மூதாட்டி சாத்தம்மை அழகாக எழுதி வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
78 வயதான இவருக்கு அடையாள அட்டைகள் எதுவும் இல்லாததால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை என்றும், முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சாத்தம்மை கோரிக்கை விடுத்துள்ளார்.