ஈரோடு மாவட்டம் பவானி அருகே, திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார், 18 வயது பூர்த்தி அடையாமல் இரு சக்கர வாகனங்களை இயக்கிய சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பள்ளி விடும் நேரங்களில் சிறுவர்கள் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களை இயக்குவதாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது பத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீஸார், அவர்களின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து எச்சரித்ததோடு, வாகனங்களை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளும்படி அனுப்பி வைத்தனர்.