திருச்சியில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும கவுண்டன்பட்டி, ஆனையூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதால் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக பிரமுகரின் கல்குவாரி என்பதால் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டினர்.