மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அணு அல்லாத வெடிகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது, நாக்பூரை சேர்ந்த சூரியசக்தி தொழிற்சாலையால் வடிவமைக்கப்பட்ட மூன்று செபெக்ஸ்-2 வெடிகுண்டுகள் பரீட்சார்த்த முறையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
உலகிலேயே மிகுந்த சக்திவாய்ந்த இந்த அணு அல்லாத வெடிகுண்டுகளுக்கு இந்திய கடற்படை ஒப்புதல் அளித்துள்ளது.
அணு அல்லாத வெடிகுண்டு பயன்பாட்டின் மூலம் இந்திய பாதுகாப்புத் துறையின் தாக்குதல் திறன் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.