ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், அடுத்ததாக மெயின் தேர்வுக்கு தயாராகலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.