இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 30ம் தேதி மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களது 4 நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாட்டு படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 5ம் தேதி பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.