நமது அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
டெல்லி ரோகினி செக்டரில் அமையவுள்ள புதிய நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
புதிதாக அமையவுள்ள கட்டடங்களில் வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார். நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நீதிமன்றங்கள் உணர்த்துகின்றன என்றும் அவர் கூறினார்.
வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பும் முக்கியம் எனக்கூறிய அவர், நமது அரசியலமைப்பு சட்டங்கள் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என சந்திரசூட் குறிப்பிட்டார்.