நாடாளுமன்ற மாண்பை குறைக்கும் வகையில் அவைத் தலைவரை அலட்சியம் செய்வதாக மல்லிகார்ஜூன கார்கே மீது மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய மாநிலங்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவைத் தலைவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஜெகதீப் தன்கர், ஒவ்வொரு முறையும் அவைத் தலைவரை அவமரியாதை செய்வதை பொறுத்து கொள்ள முடியாது என தெரிவித்தார்.
நாட்டின் வரலாற்றிலேயே மாநிலங்களவைத் தலைவரை யாரும் இப்படி அலட்சியப்படுத்தியதில்லை என்றும் கூறினார்.
மேலும், கண்ணியம் இழந்து கார்கே பேசுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டார்.