140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது! - பூபேந்தர் யாதவ்
Mar 20, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது! – பூபேந்தர் யாதவ்

Murugesan M by Murugesan M
Jul 7, 2024, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற “தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடுவோம்” என்ற மாபெரும் இயக்கத்தில் இன்று (07.07.2024) பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்,

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக,  ‘தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும்’ இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு நபரும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

நாடு முழுவதும் 140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். இயற்கை அன்னையின் மீது மரியாதை செலுத்தி, நமக்கு உயிர் கொடுத்த அன்னைக்கும் மரியாதை செலுத்தி, பசுமையை ஏற்படுத்துவது நமது கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மரக் கன்று நடும் இயக்கத்தில் மத்தியப் பிரதேச அரசின் முயற்சிகளை மத்திய அமைச்சர்  பூபேந்தர் யாதவ் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ்,

பண்டைய காலங்களிலிருந்தே, இந்தூர், உஜ்ஜைனி நகரங்கள் சூழல் பாதுகாப்பில் பங்கு வகித்துள்ளதாகக் கூறினார். இந்தூர் 7 ஆறுகளின் பிறப்பிடமாகும் என்று அவர் தெரிவித்தார்.  தூய்மையான நகரம் என்பதுடன் பசுமையான நகரம் என்பதிலும் இந்தூர் நிச்சயமாக முதலிடத்தைப் பிடிக்கும் என்று மோகன் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா

இந்தூரின் பசுமைப் பரப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.  51 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளும்   மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மரக் கன்று நடும் இயக்கத்தின் கீழ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தமது மறைந்த தாயார் லீலாபாய் ஸ்ரீ பூனம்சந்த் யாதவின் நினைவாக ஒரு மரக் கன்றை நட்டார். மத்திய அமைச்சர்  பூபேந்தர் யாதவ் தமது தாயார் திருமதி சந்தாரா யாதவின் நினைவாக ஒரு மா மரக் கன்றை நட்டார்.

Tags: A massive drive to plant 140 crore trees is underway! - Bhupender Yadav
ShareTweetSendShare
Previous Post

மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரை!: பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவு!

Related News

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies