140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது! - பூபேந்தர் யாதவ்
Sep 12, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது! – பூபேந்தர் யாதவ்

Web Desk by Web Desk
Jul 7, 2024, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற “தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடுவோம்” என்ற மாபெரும் இயக்கத்தில் இன்று (07.07.2024) பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்,

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக,  ‘தாயின் பெயரில் ஒரு மரக் கன்று நடும்’ இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருப்பதாகக் கூறினார். ஒவ்வொரு நபரும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

நாடு முழுவதும் 140 கோடி மரங்களை நடுவதற்கான மாபெரும் இயக்கம் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். இயற்கை அன்னையின் மீது மரியாதை செலுத்தி, நமக்கு உயிர் கொடுத்த அன்னைக்கும் மரியாதை செலுத்தி, பசுமையை ஏற்படுத்துவது நமது கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மரக் கன்று நடும் இயக்கத்தில் மத்தியப் பிரதேச அரசின் முயற்சிகளை மத்திய அமைச்சர்  பூபேந்தர் யாதவ் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ்,

பண்டைய காலங்களிலிருந்தே, இந்தூர், உஜ்ஜைனி நகரங்கள் சூழல் பாதுகாப்பில் பங்கு வகித்துள்ளதாகக் கூறினார். இந்தூர் 7 ஆறுகளின் பிறப்பிடமாகும் என்று அவர் தெரிவித்தார்.  தூய்மையான நகரம் என்பதுடன் பசுமையான நகரம் என்பதிலும் இந்தூர் நிச்சயமாக முதலிடத்தைப் பிடிக்கும் என்று மோகன் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாநில நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா

இந்தூரின் பசுமைப் பரப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.  51 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளும்   மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மரக் கன்று நடும் இயக்கத்தின் கீழ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தமது மறைந்த தாயார் லீலாபாய் ஸ்ரீ பூனம்சந்த் யாதவின் நினைவாக ஒரு மரக் கன்றை நட்டார். மத்திய அமைச்சர்  பூபேந்தர் யாதவ் தமது தாயார் திருமதி சந்தாரா யாதவின் நினைவாக ஒரு மா மரக் கன்றை நட்டார்.

Tags: A massive drive to plant 140 crore trees is underway! - Bhupender Yadav
ShareTweetSendShare
Previous Post

மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரை!: பிரதமர் மோடி வாழ்த்து

Next Post

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவு!

Related News

அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று – மார்கோ ரூபியோ

குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சிபிஆர் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

குடியரசு துணை தலைவராக பதவியேற்ற சிபிஆருக்கு அண்ணாமலை வாழ்த்து!

டாஸ்மாக் முறைகேட்டை முறையாக விசாரித்தால் 40,000 கோடி முறைகேடு வெளிவரும் – இபிஎஸ்

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

கருவுறுதல் விகிதம் குறைவு – பிரசவத்தை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்த தென்கொரியா!

ஹைதராபாத்தில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர்,பெண் பயணி மோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies