ஜென்டில்மேன் மீண்டும் நிரூபித்த ராகுல் டிராவிட்!
Mar 21, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜென்டில்மேன் மீண்டும் நிரூபித்த ராகுல் டிராவிட்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகமாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையை வேண்டாம் என்று கூறி தாம் கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறார் ராகுல் டிராவிட். அது பற்றி பார்ப்போம்.

அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்று கோடிக்கணக்கான ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கான காரணகர்த்தாக்களில் மிகவும் முக்கியமானவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஒரு கிரிக்கெட்டராக, ஒரு கேப்டனாக எந்த மண்ணில் தோற்றாரோ அங்கேயே ஒரு பயிற்சியாளராக வென்று காட்டினார் அவர்.

டிராவிட்டின் கிரிக்கெட் கேரியரை சற்று திரும்பி பார்த்தால் சாதனைகளும் சிறப்புகளும் நிறைந்திருக்கின்றன. டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று போற்றப்பட்ட டிராவிட் அந்த FORMAT-ல் 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். முதன்முதலாக பங்கேற்ற 1999 உலகக்கோப்பையில் அதிக ரன்களை அடித்தவர். 22 வருடங்களுக்கு பிறகு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

இப்படி பல பெருமைகள் இருந்தாலும் 2007-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது. கடைசி போட்டியில் தோற்ற போது பெவிலியனில் கண்ணீர் சிந்தியபடி டிராவிட் அமர்ந்திருந்த புகைப்படத்தை மறக்க முடியாது. ஆனால் ஒட்டுமொத்த தோல்விக்கும் கேப்டன் என்ற முறையில் டிராவிட் பொறுப்பாக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அவமானப்படுத்தப்பட்டார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சில காலம் விளையாடிய டிராவிட் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

ஒரு கேப்டனாக தம்மால் செய்ய முடியாததை பயிற்சியாளராக செய்து காட்டினார் டிராவிட். 2018-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கு டிராவிட்டின் பயிற்சியே காரணம். பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளரான அவர் 2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நம் வீரர்கள் இறுதிப்போட்டி வரை செல்ல வழிவகுத்தார். அப்போது கை நழுவிய கோப்பை தற்போது டி20-ல் வசமாகியிருக்கிறது. அதுவும் எங்கே??? எந்த வெஸ்ட் இன்டீசில் தோற்றாரோ அந்த இடத்திலேயே உலகக்கோப்பையை கையில் ஏந்தி தமது 17 ஆண்டுகால காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் டிராவிட்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக இருந்த 15 வீரர்களுக்கும் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவுக்கும், அணியின் உதவியாளர்களுக்கும் சேர்த்து 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இதில் வீரர்கள் 15 பேருக்கும் டிராவிட்டுக்கும் தலா 5 கோடி ரூபாயும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோருக்கு தலா இரண்டரை கோடியும் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. எனினும் சக பயிற்சியாளர்களுக்கு வழங்கும் இரண்டரை கோடி ரூபாயே தமக்கும் போதும் என டிராவிட் தெரிவித்துவிட்டார்.

அவரது இந்தச் செயலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலரும் பாராட்டியுள்ளனர். 2018-ஆம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற போதும் தமக்கு கூடுதல் பரிசுத் தொகை வேண்டாம் என்றும் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Rahul Dravid proves the gentleman again!
ShareTweetSendShare
Previous Post

டி.என்.பி.எல்: கோவை அணி அபார வெற்றி!

Next Post

4வது டி20 போட்டி: இந்திய அணி தொடர் வெற்றி!

Related News

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

டாக்டர் ராமதாஸ், சசிகலா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு – 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பேட்டி!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies