தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக  எழுத்தாளர் சுப்பு இருப்பார் : அண்ணாமலை
Jan 13, 2026, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக  எழுத்தாளர் சுப்பு இருப்பார் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகும்போது, அதற்கான முக்கிய காரணங்களில் ஒருவராக  எழுத்தாளர் சுப்பு இருப்பார் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

திராவிட மாயை புத்தகத்தை எழுதிய சுப்புவின் சுயசரிதையான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, திராவிட அரசியல் என்பது வெறும் மாயை என்பதை, ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் சுப்பு என புகழாரம் சூட்டினார்.

தமிழக இளைஞர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தை மீட்டெடுக்கும் வகையில், ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூலை, பாஜக தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது :

இன்றைய தினம், ஐயா திராவிட மாயை திரு. சுப்பு அவர்களது சுயசரிதை நூலான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட அரசியல் என்பது வெறும் மாயை என்பதை, ஆதாரப்பூர்வமாக, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாக வெளிப்படுத்தியவர், ஐயா திரு. சுப்பு அவர்கள். அவரது வயதொத்த மனிதர்களுடன் நெருங்கிய நண்பராக விளங்கும் அவர், தற்கால இளைஞர்களும், குருவாக ஏற்றுக் கொண்டு கொண்டாடும் அளவுக்கு, தனது எழுத்துக்களால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

மிக நேர்மையான, வெளிப்படையான மனிதர். வருங்காலத்தில், தமிழகத்தில் அரசியலில் மாற்றம் உருவாகும்போது, அதற்கு முக்கியக் காரணங்களில் ஒருவராக, ஐயா. திரு. சுப்பு அவர்களும் இருப்பார்கள் என்பது உறுதி. அவரது சுயசரிதையான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ என்ற இந்த நூலில், அவரது 45 வயது வரையிலான வாழ்க்கை குறித்துப் பதிவு செய்திருக்கிறார். பல்வேறு துறைகளில், பலதரப்பட்ட பணிகளில் ஈடுபட்டு, அவற்றில் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தையும், தனது விசாலமான பார்வையின் மூலம், வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை, மிகச் சுவாரசியமாகக் கூறியிருக்கிறார். இந்த நூலின் இரண்டாவது பாகத்தையும் படிக்க, மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்.

தமிழக இளைஞர்களிடையே படிக்கும் ஆர்வத்தை மீட்டெடுக்க @BJP4Tamilnadu
சார்பாக மேற்கொள்ளும் ஒரு சிறு முயற்சியாக, ஐயா திரு. சுப்பு அவர்களின், ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ நூலை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President Annamalaiwriter Subbupolitical change in Tamil Nadu.subu book release function
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

Next Post

கோவாவில் உலக ஆடியோ விஷுவல் & பொழுது போக்கு உச்சிமாநாடு : மத்திய அமைச்சர் எல்.முருகன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies