மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் 90 முறை கவிழ்த்தாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரும் முன்பே அது தற்காலிகமானதுதான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்தாக கூறினார்.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என அரசியலமைப்பு சட்டம் கூறுவதாகவும், ஆனால் ஆந்திராவில் மட்டும் நான்கு முறை மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் முற்பட்டதாகவும் நட்டா குற்றம்சாட்டினார்.
நாட்டில் ஆயிரத்து 500-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் இருந்தாலும், அதில் ஒன்றில் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கூறிய அவர், பாஜக மட்டுமே தேசநலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.