தாய் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் சமூகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் தாய் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ், ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாய் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கியபோது, இந்தத் திட்டம் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதை யாரும் அறியவில்லை என்று தெரிவித்தார்.
தற்போது அனைவரும் மரக்கன்று நட்டு தங்களது தாயையும், தாய்பூமியையும் கெளரவிப்பதாக அமைச்சர் அமித் ஷா கூறினார். தொடர்ந்து 55 மாவட்டங்களில், பிரதமரின் திறனறி கல்லூரிகளை அவர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.