மின் கட்டண உயர்வுக்கு, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதையும் காரணமாக ஏற்க முடியாது! - அண்ணாமலை
Oct 14, 2025, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின் கட்டண உயர்வுக்கு, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதையும் காரணமாக ஏற்க முடியாது! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 23, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பா.ஜ., இவ்வளவு பெரிய வளர்ச்சியை எப்படி எட்டியதோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., வளரும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, மாதந்தோறும் மின்சார அளவீட்டைக் கணக்கெடுத்தால் மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 200 யூனிட் பயன்படுத்தினால் மாதக்கட்டணம் 450 ரூபாய்; அதுவே இரு மாதங்களுக்குக் கணக்கிட்டுக் கட்டினால், 400 யூனிட்டுக்கு 1440 ரூபாய்.

அதாவது மாதந்தோறும் எடுத்தால், இரு மாதங்களுக்கு 900 ரூபாய் செலுத்தினால் போதும்; ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது, 1440 ரூபாயாகி, கூடுதலாக 540 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதையும் காரணமாக ஏற்க முடியாது.

வெளிநாட்டு முதலீடு தமிழகத்தில் மிகவும் குறைவு. இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 157 கோடி மட்டுமே முதலீடு ஆகியுள்ளது; மகாராஷ்டிராவில் ரூ.ஒரு லட்சத்து 25,101 கோடியும், குஜராத்தில் 60 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலும் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது.

இதை மறைத்துவிட்டு, மத்திய அரசின் மீது பழி போட, ‘இதையெல்லாம் கொடுங்கள்’ என்று முதல்வர் ‘ட்வீட்’ போடுகிறார். உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றிப் பேசினால், பா.ஜ., சதித்திட்டம் தீட்டுவதாகச் சொல்வார்கள்.

இந்தியாவில் பா.ஜ., இவ்வளவு பெரிய வளர்ச்சியை எப்படி எட்டியதோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., வளரும். லோக்சபா தேர்தலில், 11.5 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறோம்.

ஆளும்கட்சியே 26 சதவீதம்தான் பெற்றுள்ளது. அதனால் அடுத்த 500 நாட்களில், தனித்து ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் உழைப்போம். மக்கள் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம்.

ரசாயனம் கலந்த மதுபானங்களை விற்கும்போது, கள்ளை ஏன் விற்கக்கூடாது என்று, கடந்த 2006ல், அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் நீதிபதி சிவசுப்ரமணியம் அறிக்கை அளித்தார்; அதேபோல, இப்போது ஐகோர்ட் நீதிபதியும், கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தான் நாங்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையாவது இதை முதல்வர் ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம், ஓர் ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமே உள்ளதால் நிதி குறைவாகவுள்ளது. தமிழகஅரசு நிலம் கொடுத்தால், தென் மாவட்டத்தில் ஒருபல்கலைக்கழகம் கொண்டு வரத்தயாராகவுள்ளோம்.

யார் யாரையோ பா.ஜ., கட்சி என்று சொல்லி, தி.மு.க.,வினர் பட்டியல் வெளியிடுகிறார்கள். நாங்கள் ‘தி க்ரைம் முன்னேற்றக்கழகம்’ என்று ஆவணத்தை வெளியிடுகிறோம்.

மொத்தம் 18 பக்கங்கள் உள்ள இந்த ஆவணத்தில், தி.மு.க., நிர்வாகிகள் பெயர், போட்டோ, என்ன குற்றம் செய்துள்ளார், தேதி உள்ளிட்ட விபரங்களைக் குறிப்பிட்டுள்ளோம்.

போதைப் பொருள் கடத்தியது, கள்ளச்சாராயத் தொடர்புகள், அரசியல் படுகொலை, வியாபாரிகளிடம் மோசடி என 112 பேருக்கும் மேற்பட்டோர், பெரியளவில் க்ரைம் செய்தவர்கள். அதிலும் இந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பு, இந்த குற்றங்களை செய்தவர்கள் எனத் தெரிவித்தார்.

Tags: Signing up to the Udai Ein scheme is also not acceptable as a reason for the rise in electricity rates! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைக் கனலை மூட்டியவர் சுப்பிரமணிய சிவா! – அண்ணாமலை புகழாராம்

Next Post

மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்! – நிர்மலா சீதாராமன்

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies