பட்ஜெட்டில் 9 முக்கிய துறைகளுக்கு முக்கியத்துவம்!
Jan 16, 2026, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் 9 முக்கிய துறைகளுக்கு முக்கியத்துவம்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலைவாய்ப்பு, சமூக நீதி, கிராமப்புற மேலாண்மை, எரிசக்தி உள்ளிட்ட 9 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு மூலதன செலவினத்துக்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

நாட்டின் பணவீக்கம் சீராக இருப்பதாக கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 4 சதவீத இலக்கை நோக்கி முன்னேறுவதாக தெரிவித்தார். பணிபுரியும் பெண்களின் நலனுக்காக மகளிர் விடுதி கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த கடனுதவி 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் முதன்முறையாக இணையும் ஊழியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மூன்று தவணையாக நேரடி பண பயன்பாட்டு திட்டத்தின் மூலம் வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டும் பணியாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைவர் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 500 பெரிய நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு,

அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், ஒருமுறை 6 ஆயிரம் ரூபாயும் விடுவிக்கப்படும் என கூறினார்.

கைப்பேசி, சார்ஜர் மீதான சுங்கவரி 15 சதவீதமாகவும், தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான சுங்கவர 6.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தனிநபர் வருமான வரியை பொறுத்தமட்டில், 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்தார்.

3 லட்சத்தில் இருந்து 7 லட்ச ரூபாய் வரை 5 சதவீதமும், 7 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என அவர் கூறினார்.

10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதமும்,12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும்,  15 லட்சத்திற்கும் மேல் 30 சதவீதமும் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என நிதியமைச்சர் கூறினார்.

மேலும் வருமான வரி செலுத்துவோருக்கான நிலையான கழிவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: Importance of 9 major sectors in the budget!
ShareTweetSendShare
Previous Post

முதலீட்டை பெருக்கவே வட்டி உயர்வு! – நிர்மலா சீதாராமன்

Next Post

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies