ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் குறிச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்த இவருக்கும், அவரது சித்தி ராஜலட்சுமியின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பகை முற்றி தகராறு ஏற்பட்டதில் சரமாரி வெட்டப்பட்ட பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.