விழுப்புரம் அருகே கட்டப்பட்டு வரும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் தடுப்புகளை 600 மீட்டர் அளவிற்கு உயர்த்தி அமைக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏனாதிமங்கலம் – கப்பூர் இடையே கட்டப்பட்டிருந்த எல்லிச்சத்திரம் அணைக்கட்டு சேதமடைந்ததால், புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு வருகிறது.
இதனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா ஆய்வு செய்தார். அப்போது, அணைக்கட்டு மதகு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 300 மீட்டர் அளவிற்கு மட்டுமே தடுப்புகள் கட்டப்பட்டுள்ளதால், அணைக்கட்டு பாதிக்கப்படும் என விவசாயிகள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.