விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயால், சிறிய வகை வனவிலங்குகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மலைப்பகுதியில் தீயானது வேகமாக பரவி, அங்கு அரிய வகை மூலிகை செடிகள் கருகி வருகின்றன.
வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விரைவில் தீயானது கட்டப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.