குற்றாலம் அருகே வேனும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களது வாகனம் தென்காசி மாவட்டம், புண்ணியாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பலர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்திற்கான காரணம் குறித்தும், விபத்தில் சிக்கியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.