கடலூர் அருகே ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஆறாக ஓடி வீணாகி வருகிறது.
கே.என்.பேட்டை அருகே புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக, சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டும்போது, திருவந்திபுரத்தில் இருந்து கடலூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால், சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடி தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.