விழுப்புரம் அருகே உணவகத்திற்குள் புகுந்த மர்ம நபர் பணம் மற்றும் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிந்தாமணி பகுதியில் இளங்கோ என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இரவு வழக்கம்போல் உணவகத்தை மூடிவிட்டு சென்ற இளங்கோ, காலையில் உணவகத்தை திறந்து பார்த்த போது பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.