மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலை மீதான சுங்கவரியை 6 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது.
அந்தவகையில் 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3 ஆயிரத்து 160 ரூபாய் குறைந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த இல்லத்தரசிகள் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு பின் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 465 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனைத்தொடர்ந்து வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.