கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கர்வார் அருகே சதாசிவ்காட் பகுதியில் காளி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் இடிந்து விழுந்தது.
உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக அதிகாலை ஒரு மணியளவில் காளி ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி, ஆற்றுக்குள் விழுந்தது.
ஆற்றில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிய லாரி ஓட்டுநரை அப்பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காளி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததால், கோவா- கர்நாடகா நெடுஞ்சாலையில் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர், மாற்றுப் பாலத்தின் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.