நேபாளத்திற்கு பிரதமர் மோடி வருகை தர வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி 2 நாள் பயணமாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். அவர் நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்ததாகவும், பிரதமர் மோடி நேபாளத்திற்கு வர வேண்டும் என விக்ரம் மிஸ்ரி வாயிலாக அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளதாகவும் நேபாள பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.