பிரபல கால்பந்து வீரர் நெய்மர் இன்ஸ்டாகிராமில் தன்னை தொடர்பு கொண்டதாக, பராகுவே நீச்சல் வீராங்கனை லுவான் அலோன்சோ தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கின்போது, அணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயன்றதால், லுவான் அலோன்சோ வெளியற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் இன்ஸ்டாகிராமில் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவர் தன்னுடைய மிகப்பெரிய ரசிகன் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஒலிம்பிக்கில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதாக வந்த தகவல்களை லுவான் அலோன்சோ மறுத்துள்ளார்.