இந்திய ஆராய்ச்சிக்குழு அபாரம் நீரழிவை கட்டுப்படுத்தும் குர்மர் மூலிகை கண்டுபிடிப்பு!
Mar 21, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ஆராய்ச்சிக்குழு அபாரம் நீரழிவை கட்டுப்படுத்தும் குர்மர் மூலிகை கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 13, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரின் கயாவில் உள்ள பிரம்மயோனி மலையில் மருத்துவ தாவரங்களின் வரிசையை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் குர்மர் ஆகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாரம்பரிய இந்திய மருத்துவர்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பீகாரில், கயாவின் பிரம்மயோனி மலையில் காணப்படும் சில சிகிச்சைத் தாவரங்கள் பற்றிய எத்னோபோட்டானிக்கல் ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான ஆய்வின் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சிகிச்சை நோக்கங்களுக்காக பழங்குடி மக்கள் பயன்படுத்தும் தாவரங்களை சேகரித்து அடையாளம் காண்பது மற்றும் பாரம்பரிய மூலிகை மருத்துவம் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது ஆய்வின் குறிக்கோளாகும்.

அதன் அடிப்படையில், அம்மலையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் அழிந்து போவதைத் தடுப்பதற்காக உள்ளூர் மக்களிடம் மூலிகைகள்பயிரிடுவதை வலியுறுத்தி இருக்கிறது.

பயன்படுத்தப்பட்ட தாவர இனங்களின் சரியான பதிவு மற்றும் அடையாளம், அத்துடன் மூலிகை தயாரிப்பு என பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

குர்மர் என்பது பிரம்மயோனி மலையில் காணப்படும் மூன்று முக்கிய மருத்துவ தாவரங்களில் ஒன்றாகும், இந்த குர்மர், இயற்கை வைத்தியத்திற்கான புதையல் ஆகும்.

மாறிவரும் வாழ்க்கை முறைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள் காரணமாக நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட CSIR-ஆல் உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சூத்திரமான BGR-34-ல் குர்மர் மூலிகை ஒரு கருவியாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடலின் வெளிப்புறப் பகுதியை ஆக்கிரமிப்பதன் மூலம் இது செயல்படுகிறது, இதன் மூலம் இனிப்புக்கான பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, குடல் குறைவான சர்க்கரை மூலக்கூறுகளை உறிஞ்சுகிறது, இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. கூடுதலாக, வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதே சமயம் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் செய்கின்றன.

2022ம் ஆண்டில், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்விலும் , BGR-34 என்ற மூலிகை மருந்து ரத்த சர்க்கரை அளவுகளுடன் உடல் பருமனைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், இது உடலின் வளர்சிதை மாற்ற அமைப்பையும் மேம்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

BGR-34 போலவே, முதல் நீரிழிவு மருந்து மெட்ஃபோர்மினும் மூலிகை தாவரமான கலேகாவிலிருந்து பெறப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மற்றொரு பயனுள்ள நீரிழிவு எதிர்ப்பு சிகிச்சைக்கு குர்மர் மூலிகை மற்றொரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

குர்மர் மட்டுமில்லாமல் Pithecellobium dulce மற்றும் Ziziphus jujuba ஆகிய மூலிகைகளும் பிரம்மயோனி மலையில் காணப்படுகின்றன. இவை பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது.

சர்வதேச கிரியேட்டிவ் ரிசர்ச் சிந்தனைகள் இதழில் (IJCRT) வெளியிடப்பட்ட ஆய்வும், குர்மர் மூலிகையில் ஜிம்னெமிக் அமிலம் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை அது குறைக்கிறது என்று கூறியிருக்கிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021ம் ஆண்டில், இந்தியாவில் 74.9 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2045ம் ஆண்டில் 124.9 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறையினருக்கு இந்தியாவின் மதிப்புமிக்க மருத்துவ வளங்களைப் பற்றியும் அவற்றை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Tags: Indian research team discovery of curcumin herb that controls diabetes!
ShareTweetSendShare
Previous Post

கொலைக்கு பின் வன்கொடுமை? : பெண் மருத்துவர் வழக்கில் திடீர் திருப்பம்!

Next Post

11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் மோடி!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies