பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு! - சிபிஐக்கு மாற்றம்!
Sep 12, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு! – சிபிஐக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Aug 13, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவந்த முதுநிலை மருத்துவ மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சந்தீப் போஷ், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகிய அடுத்த சில மணிநேரத்தில், வேறொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக அவர் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தீர்வு காணாவிட்டால், சிபிஐவசம் ஒப்படைக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரி முதல்வரைத்தான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

மேலும், அவர் பதவி விலகிய ஒருமணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.

மேலும், பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Tags: Practitioner murder case! - Change to CBI!
ShareTweetSendShare
Previous Post

ஹிண்டர்பர்க்கின் நோக்கம் என்ன ? ஆய்வறிக்கைகளின் பின் இருக்கும் புதிர்கள் என்ன?

Next Post

தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா மீது புகார்!

Related News

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies