புதுச்சேரியில் காவலர் எனக்கூறி போலி அடையாள அட்டையை காட்டி விவசாயியிடம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உலவாய்க்கால் பகுதியை சேர்ந்த ரமேஷ் விவசாயம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த திலீபன் என்பவர் தான் தமிழக போலீஸ் எனக்கூறி போலி அடையாள அட்டையை காட்டி மிரட்டி 90 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் 2 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயி, திலீபனை பற்றி விசாரித்தபோது அவர் போலீஸ் அல்ல என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரமேஷ் புகாரளித்த நிலையில் திலீபனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.