தெலங்கானாவிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
தெலங்கானாவிலிருந்து தேர்வாகும் மாநிலங்களவை உறுப்பினர்களில் ஓரிடம் காலியாக இருந்த நிலையில், அதற்கு அபிஷேக் மனு சிங்வி பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.