நாட்டிலேயே முதன்முறையாக கார்பன் உமிழ்வு இல்லா விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.
இதையொட்டி, சர்வதேச விமான நிலைய கவுன்சிலின் கார்பன் அங்கீகார திட்டத்தின்கீழ், ஐந்தாம் நிலை சான்றிதழ் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கார்பன் உமிழ்வை வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.