ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட சிலர் மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு ரத்து செய்யப்பட்டது.
ஃபரூக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில், கிரிக்கெட் சங்க நிதியை மடைமாற்றம் செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.