இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கவைச் சேர்ந்த முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகளின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலிப்பும் செயல்பட உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.