சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11ம் தேதியும், விஜயதசமி அக்டோபர் 12ம் தேதியும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பயணிகள் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.