கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்த சிலர், அவசர சிகிச்சை பிரிவை சூறையாடினர். போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.