அதிகரிக்கும் மவுசு! : விரைவில் வருகிறது BSNL 5ஜி சேவை!
Mar 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகரிக்கும் மவுசு! : விரைவில் வருகிறது BSNL 5ஜி சேவை!

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா செல்லுலார் கட்டண உயர்வுக்குப் பிறகு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பியுள்ளனர். குறைந்தவிலை திட்டங்களால், வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ள BSNL, அடுத்த சில மாதங்களில் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சமீபத்தில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 4ஜி நெட்வொர்க் தயாராக உள்ளதாகவும், இந்த நெட்வொர்க்கை 5ஜியாக மாற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும் என்றும் உறுதி அளித்திருந்தார். அதனால், பிஎஸ்என்எல் சேவை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை ஆர்வமுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, 15 வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை வந்திருந்த நிலையில் கென்யா, மொரிஷியஸ், பப்புவா நியூ கினியா மற்றும் எகிப்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இதற்காக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை நெட்வொர்க்கில் பயன்படுத்துவதற்கு ஐடி நிறுவனமான டிசிஎஸ் மற்றும் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான சி-டாட் தலைமையிலான கூட்டமைப்புடன் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வந்தது.

2024ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள் உள்நாட்டில் சோதனை செய்து விட்டு வெளிநாட்டில் 4ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான அரசின் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இதற்கிடையே BSNL கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறது.

இப்போது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் BSNL, 4ஜி நெட்வொர்க்கின் ஒரு லட்சம் டவர்களை கட்டி முடிக்க அரசு இலக்கு வைத்துள்ளது.

ஏற்கெனவே, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் 15,000, 4 ஜி டவர்கள் கட்டப் பட்டுள்ளன. வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 80,000 ஆக உயர்த்தவும் BSNL திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 21,000, 4 ஜி டவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் மார்ச்சுக்குள் 4G சேவையை வழங்குவதுடன், அதற்கடுத்த 8 மாதங்களுக்குள் BSNL தனது 5G சேவைகளை வழங்க தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் முதலீடுகள் மற்றும் சந்தைப் பங்கு அதிகரித்துள்ள நிலையில், ஜியோவுடன் போட்டிக்கு தயாராகி வருகிறது BSNL.

சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை முன் வைத்த பிரதமர் மோடியின் இலக்கை சரியாக பயன்படுத்தி தொலைதொடர்பு சந்தையில் BSNL முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Tags: Increasing mouse! : BSNL 5G service coming soon!
ShareTweetSendShare
Previous Post

நாசா கண்டுபிடிப்பு! : செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல்?

Next Post

வெளிநாட்டில் வெற்றிக்கொடி! : அமெரிக்கா, பிரிட்டனை கட்டி ஆளும் இந்தியர்கள்!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies