ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவானது.
பாரமுல்லா பகுதியில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பாரமுல்லா பகுதியில் மீண்டும் காலை 6.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.