கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த அருள்மணி என்பவர் தனது நண்பரின் உயரக இருசக்கர வாகனத்தில் காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக சென்றதால் எதிரே வந்த ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அருள்மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அருள்மணி மதுபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அருள்மணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.