தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா, தஞ்சை, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவில்கள் கலந்து கொண்ட நிலையில், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும், கொல்கத்தா பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பெண்கள் மீது தொடரும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினர்.