கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க 2வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.
இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 புள்ளி 27 அடியை எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுவதால் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை நீடிக்கிறது.