லஞ்ச புகாரில் எல் அன்ட் டி நிறுவன தலைவர் சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்ய அமெரிக்கா போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனத்தில், சுப்ரமணியம் பணியாற்றியபோது சென்னை, புனேயில் கிளைகளைத் தொடங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது அமெரிக்க சட்டத்திட்டங்களை மீறும் செயல் என்பதால், எல் அன்ட் டி நிறுவன தலைவர் சுப்ரமணியம் மற்றும் நான்கு ஊழியர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்கா போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.