மகாராஷ்டிராவில், பட்டப்பகலில் மகனை வாளால் தாக்கிய மூன்று பேரை கல்லால் தாக்கி தாய் விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஜெய்சிங்பூரில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து மகனுடன் தாய் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் கும்பல், வாள் மூலம் இளைஞரை தாக்க தொடங்கியுள்ளது.
இதனையடுத்து தாயும், மகனும் சேர்ந்து அந்த கும்பல் மீது கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் தாக்குதலை கைவிட்டு தப்பி ஓடினர்.
மகனை வாளால் தாக்க வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய தாயின் துணிச்சல் சமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.