அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற பல ஆண்டுகள் போராடிய அமரர் N.S.பழனிசாமியின் கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தனது இறுதி மூச்சு வரை மதுக்கடைகளுக்கு எதிராகவும், கள் தடையை நீக்கி விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், பல போராட்டங்களை நடத்தியவர் N.S.பழனிசாமி என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஆனைமலை நல்லாறு திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், கள்ளுக்கான தடை நீக்கம் ஆகியவற்றை, நிறைவேற்றுவது, அமரர் N.S.பழனிசாமிக்கு செய்யும் மரியாதை என்றும் அண்ணாலை தெரிவித்துள்ளார்.