மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 25ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரியின் குன்னூருக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பருவமழை காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே தண்டவாளம் சேதமடைந்து வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மலை ரயில் போக்குவரத்து வரும் 25ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.