முதியவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்த சிஎம்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறையை சேர்ந்த இருதய நோயாளியான முதியவர் பாபுஜி வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவரான ஓமன் ஜார்ஜிடம் ஆலோசனை பெற அனுமதி பெற்றிருந்தார்.
இந்நிலையில் மருத்துவரை சந்திக்க சென்றபோது மருத்துவர் இல்லை என்பதால் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து நாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் முதியவர் வழக்கு தொடர்ந்த நிலையில் மருத்துவமனைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.