மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதிகேட்டு புதுக்கோட்டையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில், மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.