புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பாக சிலர் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி இந்துமுன்னணி அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் முகாம் அலுவலக வளாகம் முன்பாக நின்றுக்கொண்டிருந்த 3 பேர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் கிறிஸ்தவ குறிப்பேடுகள் கொடுத்து தங்களின் மதத்திற்கு மாறுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த இந்து முன்னணியினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.