வெற்றி தரும் விநாயகர் - சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது ஏன்?
Jun 8, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெற்றி தரும் விநாயகர் – சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது ஏன்?

Web Desk by Web Desk
Sep 7, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் பண்டிகை என்றால் விநாயகர் சதுர்த்தி தான். வேண்டியதை எல்லாம் அளிக்கும் விநாயகர் பற்றியும், அவருக்கான மகாசதுர்த்தி விழா பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. கஜமுகாசுரன் என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, இறைவனிடம் ஒரு வினோதமான வரத்தைப் பெற்றுவிட்டான்.

அதாவது, தன்னைக் கொல்பவன் மனிதனாகவும் இருக்கக் கூடாது; மிருகமாகவும் இருக்கக் கூடாது; மனிதரோ தேவரோ உருவாக்கின ஆயுதத்தால் தன்னைக் கொல்லக் கூடாது என்று வரம் பெற்றிருந்த கஜமுகாசுரன் தேவர்களையும் ரிஷிகளையும் படாதபாடு படுத்தி வந்தான்.

கஜமுகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் ,சிவபெருமானிடம் சென்று தங்கள் துயரங்களை போக்கவல்ல விக்கினராஜன் வேண்டும் என்று வேண்டுதல் வைத்தனர். ஈசனும் தேவர்களின் வேண்டுதலுக்குத் செவி சாய்த்தார்.

திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் என்னும் இரண்டு பிரணவங்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன.

அந்த இரண்டு பிரணவங்களையும் பார்வதியும், பரமேஸ்வரனும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்தது. அதில் இருந்து ஓங்காரச் சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றி அருளினார்.

அம்மையப்பரை வலம்வந்து வழி பட்டதால் பிள்ளையார் என போற்றப்படுகிறார். சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் என்பதால் கணபதி என்று அழைக்கப்படுகிறார். தமக்கு மேல் ஒரு நாயகன் இல்லை என்பதால் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகளுடன் விநாயகப் பெருமான், ஓங்கார மந்திர சொரூபமாக விளங்குகிறார்.

விநாயகப் பெருமானின் கும்பம் ஏந்திய கரம் படைத்தல் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகப் பெருமான் ஐம்பெருந் தொழில்களைத் தம் ஐந்து கரங்களால் புரிந்து அனைத்து ஆன்மாக்களுக்கும் அருள்புரிகின்றார்.

பிற தெய்வ வடிவங்கள் சிற்ப இலக்கணத்துக்கு ஏற்பவே அமையவேண்டும் என்பது சாத்திரம். ஆனால் பிள்ளையாரை மஞ்சள்,சந்தனம், களி மண், மஞ்சள், வெல்லம், சாணம், எருக்கம் வேர், என எதில் பிடித்து வைத்து வழிபட்டாலும் நன்மைகள் புரிவார் என்று விநாயக புராணம் கூறுகின்றது. அருகம்புல் சாற்றி விநாயகப் பெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.

முதன் முதலில் பார்வதிதேவி தான் விநாயகர் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து அனைவருக்கும் வழிகாட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.

குறுமுனி அகத்தியரின் கமண்டலத்தில் கவிழ்த்து காவிரியைத் தந்தவர். முருகனுக்குத் திருமணம் நடத்தி வைத்தவர். வேத வியாசர் சொல்ல சொல்ல மகா பாரதத்தை எழுதியவர்.தேவாரத் திருமுறைகளை மீட்டுக் கொடுத்தவர்.இத்தகைய பெருமைகள் உடைய பிள்ளையார் எளிமையாக வழிபடும் பக்தர்களுக்கு எல்லா சிறப்புக்களையும் அள்ளித் தருகிறார்.

கணபதி தாளை தலையில் வைத்தால் திக்கெல்லாம் ஜெயக் கோடி நாட்டலாம் என்று மகாகவி பாரதி சொன்னது போல் கணபதியை வணங்கி வெற்றி பெறுவோம்

Tags: Ganesha ChaturthiLord GaneshaVinayakar Chaturthi festival reason
ShareTweetSendShare
Previous Post

திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Next Post

தேசிய நல்லாசிரியர் விருது வென்ற 82 பேருடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி – மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அறிவுறுத்தல்!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம்!

குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!

திருச்செந்தூர் – பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!

வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – கோகோ கப் சாம்பியன்!

கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடி – வீடியோ வைரல்!

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் – சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies