இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய நிறுவன தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு கருதி, சைபர் கிரைம் மையம் இதுவரை 600-க்கும் அதிகமான அறிவுறுத்தல்களை பிறப்பித்ததாக கூறினார்.
சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இணையதள முகவரிகள், சமூக வலைதள கணக்குகள், கைப்பேசி செயலி ஆகியவற்றை சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் இணைய பாதுகாப்பு இன்றி, நாட்டின் பாதுகாப்பு இல்லை என்றும் அமித் ஷா திட்டவட்டமாக கூறினார்.