அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி
Sep 13, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்! : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 25, 2024, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட தேர்தலில் 61 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் 11 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 15 தொகுதிகள் என 26 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-ம் கட்டத் தேர்தலில் சுமார் 25 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ள நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி உள்ளிட்ட 239 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவத்தினர், காவல் துறையினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், தீவிரவாதம் இல்லாத மற்றும் வளர்ந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Everyone should vote and strengthen democracy! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஆடம்பர கார் அணிவகுப்பு : ஒரே இடத்தில் குவிந்த High-tech கார்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Related News

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

தீபாவளி பண்டிகை – 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முதல்வர் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் எந்த பயனும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies